காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியதாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வந்த காஷ்மீர் விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் முற்றுப்புள்ளி வைத்தார்.அதாவது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அமித் ஷா இந்த அறிவிப்பை அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காஷ்மீர் தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒருசேர கிளம்பி வருகிறது.இந்த நிலையில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி என்ற பகுதியில் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.குறிப்பாக ஆந்திரா,கர்நாடகா,ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து 30 மாணவ -மாணவியர்கள் நோட்டீஸ் ஒட்டியதாக புகார் எழுந்தது.இதனையடுத்து இந்த மாணவர்களிடம் விளக்கம் கேட்டு மத்திய பல்கலைக்கழக ஒழுக்க நெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…