காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.
நடிகையாக இருந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.இதன் பின் திமுகவில் இருந்து விலகி கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார் குஷ்பு .அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது.சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் பாஜகவில் இணையவே டெல்லி சென்றார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை அக்கட்சியின் தலைமை நீக்கம் செய்வதாக அறிவித்தது.
எனவே இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் .அவரது கடிதத்தில் , கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும்,மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் என்னை அடக்கி வைத்தனர்.காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாக அக்கடிதத்தில் குஷ்பு தெரிவித்தார்.இந்நிலையில் காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…