கிரண்பேடியால் தான் புதுவையில் கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை -புதுவை அமைச்சர் காட்டம்!

Published by
Rebekal

புதுவையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கிரண்பேடி தடையாக இருப்பதாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் காட்டம்.

புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாகவும் அங்குள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அடிக்கடி எழுந்து வரக்கூடிய புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த நெருக்கடியின் பெயரில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவு தரமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அவர் நிச்சயம் இன்னும் தரமான உணவுகளை வழங்க அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

மேலும் இன்னும் அதிக சுகாதாரமாக மருத்துவமனையை வைத்திருக்க பணியாளர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் பின்பு வீடியோ பதிவில் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறேன். மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடை மூலம் விநியோகிக்க கூடாது எனவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தடை செய்கிறார். அரிசி வழங்குவது ஆசிரியர்கள் வேலை இல்லை ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வழங்கினால்  5 நாட்களில் மக்களுக்கு வழங்கி விடலாம்.

மேலும் கிரண் பேடி தன்னை ஒரு மருத்துவர் போல நினைத்துக் கொண்டு தவறான முடிவு எடுத்து வருகிறார். கொரோனா மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூடுதல் சுகாதார பணியாளர்கள் நியமிப்பதற்கு தடையாக இவர் இருக்கிறார் என்று கூறிய அமைச்சர், கிரண்பேடி ரியல் ஹீரோ அல்ல, முடிந்தால் கொரானா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளை மேம்படுத்துங்கள். இல்லை என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பு தூங்கியது போலக் தூங்கிக் கொண்டே இருங்கள் என ஆவேசத்துடன் கூறியுள்ளார் புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

Published by
Rebekal

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago