கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
*சந்தைக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்
*சந்தைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் இல்லை என்றால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் தனிமனித இடைவேளையை பின்பற்றுவது கட்டாயமாகும்.
*உணவு தானிய விற்பனை அங்காடி செப்டம்பர் 18-ல் திறக்கப்படும்.
*மூன்றாம் கட்டமாக, பழம் அங்காடி, மலர் அங்காடி திறக்கப்படும்.
*கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.
*சரக்குகளை இறக்கியபின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வாகனங்கள் அனைத்தும் வெளியேற வேண்டும்.
*கோயம்பேடு அங்காடிகளில் மூன்று, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.
*வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…