திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது.அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அடுத்து, கே.பி.ராமலிங்கம் திமுகவில் வகித்து வந்த விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பாக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக (சஸ்பெண்ட் ) திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.பின்பு கே.பி.ராமலிங்கத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே இன்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்தித்துள்ளார்.இதனையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று தமிழகம் வரும் மத்திய அமைச்சரும்,பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவை கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…