CrackerGoodownFire [Image Source : Twitter/@sunnewstamil]
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கடையின் உரிமையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்ததன் காரணமாக, அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடரில் எம்.பி தம்பிதுரை, இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சரும், கிருஷ்ணகிரியில் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகில், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எந்த வித எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விற்பனை எதுவும் செய்யவில்லை என பதில் அளித்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பட்டாசு கடை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை மேற்கொள்ள சிப்காட் நில எடுப்பு பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) பவணந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…