ராஜகண்ணப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்..!

Published by
Rebekal

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த ராஜகண்ணப்பன், தற்பொழுது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றியது மட்டும் போதாது, அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும்  கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு மதுரையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கே பாலகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது எனவும், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை எழுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிரான திமுகவின் போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் நட்பு ரீதியாக நாங்கள் துணை நிற்போம் எனவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago