ராஜகண்ணப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்..!

Published by
Rebekal

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த ராஜகண்ணப்பன், தற்பொழுது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றியது மட்டும் போதாது, அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும்  கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு மதுரையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கே பாலகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது எனவும், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை எழுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிரான திமுகவின் போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் நட்பு ரீதியாக நாங்கள் துணை நிற்போம் எனவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago