தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று காலை சென்னை வந்தனர். இதையடுத்து, தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணைய குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், கால அவகாசம் அதிகம் கொடுக்காமல் வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையருடனான ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவும், திமுகவும் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு இன்று மாலை சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…