பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்கான பாடங்கள் ஆப்லைன் மூலம் ஒளிப்பரப்ப ஏற்பாடு – சென்னை ஐ. ஐ. டி.!

Published by
Ragi

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்காக பாடங்கள் அனைத்தும் இன்று முதல் ஸ்வயம் பிரபா சேனல் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் அவதிப்படும் மாணவர்களுக்காக ஆப்லைன் வடிவில் பாடங்களை வழங்குவதற்கான முயற்சியை சென்னை ஐ. ஐ. டி எடுத்துள்ளது.

அதன்படி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களின் பாடங்களில் முக்கியமானவற்றை மட்டும் 300 மணி நேர காலளவில் வீடியோவாக சென்னை ஐ. ஐ. டி மற்றும் பல்வேறு மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வீடியோவாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பாட தொகுப்பை இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை மத்திய அரசின் ஸ்வயம் பிரபா கல்வி சேனல் மூலம் ஒளிப்பரப்பவுள்ளனர் . ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் இந்த சேனலில் ஒளிப்பரப்பப்படும் வீடியோவை பார்க்குமாறும், தினமும் ஒளிப்பரப்படும் பாடங்களின் அட்டவணையை http://www.swayamprabha.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை ஐ. ஐ. டி தெரிவித்துள்ளது.

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

12 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

12 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

12 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

13 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

13 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

14 hours ago