12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், மேலும் 14 தனியார் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் வழங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டியோ தயார் செய்யப்பட்டு பாடங்கள் வீடியோ வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோக்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று முதல், 12-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வீடியோவை பதிவிறக்கம் செய்து அளிக்க உள்ளனர்.
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…
வாசிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…