கோவை மேற்கு மண்டலத்தின் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ஊழல், அராஜகம் செய்து மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அமைச்சர் வேலுமணி நினைக்கிறாரா? என்று கூறி மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது கேவலமாக இல்லையா உங்களுக்கு என்று கூறியுள்ளார்.
இன்று அமைச்சர் பதிவில் உள்ளதால் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வேலுமணிக்கு தலையாட்டி கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறும், அன்று காட்சியும் மாறும். வேலுமணி ஊழல் மற்றும் அராஜக ஆட்சிக்கு முடிவுகட்ட வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றாக வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அதில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக குழிதோண்டி புதைப்போம். மக்கள் பேராதரவுடன் அதை நடத்தி முடிப்போம் என உறுதி அளித்துள்ளார். கலைஞரின் கடைசி ஆசை ஆட்சிக்கு வர வேண்டும் என்பது இல்லை நாட்டை காப்பற்ற வேண்டும் என்பதுதான் என கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…