சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் – முக ஸ்டாலின் மடல்

Published by
பாலா கலியமூர்த்தி

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் மட்டுமே அடிமை அ.தி.மு.க. அரசின் ஒரே கொள்கை – முக ஸ்டாலின் மடல் 

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசு என்பது போல, திமுகவும் மக்களுடைய மாபெரும் இயக்கமாக தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.  பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவராக 103 வயதிலும் வேளாண் பணிகளில் ஈடுபடும் ஈரோட்டைச் சேர்ந்த பாப்பம்மாள் அம்மையாருக்கு கிடைத்திருப்பது, தமிழர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரும் செய்தி.

ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஆயத்தமாகிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே நம்பிக்கைக்குரியதாக இருப்பது, தி.மு.கழகத்தின் தலைமையிலான சிறப்பான கூட்டணிதான். காரணம், ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கின்ற இயக்கம் இது. ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நேரத்தில், அழுத்தமாக ஒலித்த குரல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய இயக்கம் திமுக.

தமிழகத்திலும் நடைபெற்ற விவசாயிகளின் பேரணிகளை முடக்கும் வகையில் அதிமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகச் செயல்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும். பேரிடர் நேரத்திலும் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் “ஒன்றிணைவோம் வா” என கொரோனா பேரிடர் காலத்தில் துணை நின்றது திமுக. ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்களை’ நடத்தி, அவர்களின் குறைகளைச் செவிமடுத்த இயக்கம் இது.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன் – கமிஷன் – கலெக்ஷன் என்பது மட்டுமே அடிமை அ.தி.மு.க. அரசின் ஒரே கொள்கை என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மை வெள்ளமாகப் பெருகும்போது, ஊழல் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துதான் விழும். சட்டைப்பாக்கெட்டில் வைத்திருக்கும் படத்தைப் பார்த்தால் ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற உண்மை தெரியும். அதனால், முதல்வர் பழனிசாமி சற்று குனிந்து பார்க்கட்டும். குனிவதுதான் அவருக்கு ரொம்பவும் இயல்பாயிற்றே.

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் குறைகளைத் தீர்த்திட வேண்டும் என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 100 நாட்களும் அதற்கு மேலும் அயராது உழைத்திட வேண்டும். கழக அரசு நிறைவேற்றவுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தேர்தல் களத்தில் நூற்றுக்கு நூறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். “மிஷன் 200” என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

40 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago