எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய நிலையில் உறுதி மொழியும் ஏற்றுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமி,அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.இதன் பின்பு அதிமுகவினர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.அந்த உறுதி மொழியில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம்.வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரர்களாக கழக உடன்பிறப்புகள், சிங்கமென தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம்.
தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி, ஜெயலலிதாவின் நல்லாட்சி, விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி மீண்டும் மலர பாடுபடுவோம்.மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் அம்மாவின் ஆட்சி, மீண்டும் மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம், எதிரிகளின் பொய் முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என உளமார உறுதி ஏற்போம்.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…