கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில், நேற்றுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார் என கூறியிருந்த நிலையில், தற்போது தமிழக மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய முதல்வர் கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது, என்றும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும், கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீத பேருக்கு அறிகுறிகளே இல்லை.
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டப்போதிலிருந்து வீட்டிலே இருந்து அதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களை பாராட்டினார். பயிர்க்கடன், கூட்டுறவுக்கடன், மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடிதிருத்துவோருக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.வெளியே செல்லும்போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் முழு ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலை தடுப்பது சாத்தியமாகாது என தெரிவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…