இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், முதலில் கால்நடை கிளை நிலையம் துவக்கப்பட்ட பின் மருந்தகம் துவக்கப்படும், அதன் பின்னர் தான் அது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எம தெரிவித்தார். பின்னர் உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர், அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.1,656 கோடி செலவில் 46 லட்சத்து 20 ஆயிரத்து 91 கால்நடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் கிராமங்களுக்கே சென்று அம்மா ஆம்புலன்ஸ் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…