புதுச்சேரியில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மத்திய அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அம்மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்ட முடிவில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி எனவும், புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், மாநிலத்தை விட்டு வெளியே செல்பவர்களுக்கும் இ பாஸ் கட்டாயம் எனவும், பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை 31-ம் தேதிவரை திறக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…