கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர்களை கபளீகரம் செய்யும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்றும் எருக்கஞ் செடிகளில் மட்டும் இருக்க கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், இந்த வகை வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு சென்று வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்பிரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…