3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் – மதுரை ஐகோர்ட்!

Published by
Rebekal

3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என மதுரை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டுமான பணிகளை விரைவில் துவங்க வேண்டும் எனவும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் தான் அமைய உள்ளது என மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இது தொடர்பான உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என நம்புவதாகவும், நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்காமல் கட்டுமான பணிகளை மத்திய அரசு விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

33 minutes ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

4 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

5 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

7 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

8 hours ago