கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும், தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
குறிப்பாக விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாத சூழல் ஆங்காங்கே நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மதுரையில் ஊரடங்கு காரணமாக கடந்த 22 நாட்களாக முடங்கியிருந்த மலர்ச்சந்தை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் மதுரை ஆரப்பாளையம் ஆகிய இடங்களில் மலர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 105 கடைகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 60 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது. மலர்களை வாங்க வரும் பொதுமக்களும் சமூக இடைவெளி உடன் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் இன்றி வரும் பொதுமக்கள் மலர் சந்தைக்குள் அனுமதிக்கபடுவதில்லை. இந்த விதிமுறைகளை கண்காணிக்க தோட்டக்கலை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் கண்காணிப்பில் உள்ளனர்.
22 நாட்களுக்கு பிறகு இன்று மலர் சந்தை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகிறதாம். நாளை பொதுமக்கள் கூட்டம் வழக்கம்போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…