22 நாட்களுக்கு பிறகு மதுரையில் பூத்து குலுங்கும் மலர்ச்சந்தை.!

Published by
மணிகண்டன்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும், தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
குறிப்பாக விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாத சூழல் ஆங்காங்கே நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மதுரையில் ஊரடங்கு காரணமாக கடந்த 22 நாட்களாக முடங்கியிருந்த மலர்ச்சந்தை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் மதுரை ஆரப்பாளையம் ஆகிய இடங்களில் மலர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 105 கடைகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 60 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது. மலர்களை வாங்க வரும் பொதுமக்களும் சமூக இடைவெளி உடன் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் இன்றி வரும் பொதுமக்கள் மலர் சந்தைக்குள் அனுமதிக்கபடுவதில்லை. இந்த விதிமுறைகளை கண்காணிக்க தோட்டக்கலை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் கண்காணிப்பில் உள்ளனர்.
22 நாட்களுக்கு பிறகு இன்று மலர் சந்தை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகிறதாம். நாளை பொதுமக்கள் கூட்டம் வழக்கம்போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

1 hour ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

3 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

4 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

5 hours ago