கொரோனா நோயாளிக்களுக்காக கழிவறையில் ஆக்ஸிஜன் வசதி செய்த மதுரை அரசு மருத்துவமனை.!

Published by
Ragi

கொரோனா நோயாளிகளுக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் கழிவறையில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு மதுரை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிப்புடைய நோயாளிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முக்கியம் என்பதால் மதுரை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் அதிகம் பாதிப்பு உடையவர்களை கழிவறைக்கு செல்ல கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஏனெனில் அதிக பாதிப்பு உடையவர்கள் கழிவறைக்கு செல்லும் போது திடீரென ஆக்ஸிஜன் குறைப்பாடு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மறுத்துள்ளனர். தற்போது அதற்கு ஒரு தீர்வு காணும் பொருட்டாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையின் வாசல் மற்றும் உள்பகுதியில் புதிதாக ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கூறிய போது, அதிக பாதிப்பு உடையவர்கள் மட்டுமில்லாமல் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சு திணறல் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியாது என்பதால் கழிவறையில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவறைக்கு செல்லும் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

6 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago