பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் இணைந்தனர்.
மதுரையில் சலூன் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, அப்பகுதியில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பை இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வழங்கியுள்ளார். இதனை மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவு செய்துள்ளார். இவருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்திருந்தார்.
பின்னர், பாஜக தலைவர் எல்.முருகன், மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மோகன் மகள் நேத்ராவை UNADAP-வின் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவித்து, அவருடைய எதிர்காலத்திற்காக ரூ.1 லட்ச ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர். அத்துடன், மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மோகனை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்தது ஏன்? என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாஜகவில் இணைந்துளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…