புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிரணி என இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், 3வது அணியாக மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுசி கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என மநீம மாநில பொறுப்பாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து களமிறங்கியுள்ளது. 70 பேர் கொண்ட முதற்க்ட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…