[file image]
மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ்.
மணிப்பூர் வன்முறை, அங்கு பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதலே நாளே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது.
இதன்பின் மறுநாளும் மணிப்பூர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி உடனடியாக இரு அவைகளிலும் பேச வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அன்றும், அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் பிற அலுவலல்களை ஒத்திவைத்து மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். சுமார் 80 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் தொடரும் வன்முறையால் சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் திமுக எம்பி திருச்சி சிவா அளித்துள்ள நோட்டிஸில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…