சென்னையில் செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி, மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது.
இதன்காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டத்தை விடுவது, போன்றவற்றுக்கு செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து அம்மாவட்ட மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அமைந்தக்கரை பகுதியில் உள்ள செருப்புக்கடை ஒன்றில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், அந்த கடையில் நடத்திய சோதனையில் அங்கு மாஞ்சா நூல்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த செருப்பு கடை உரிமையாளர் தமீம் அன்சாரி மற்றும் ஷாஜகான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த கடையில் இருந்த மேற்பட்ட காத்தாடிகள் மற்றும் மாஞ்சா நூலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…