‘மார்க்கண்டேயன் ஸ்டாலின்’ – நடைப்பயிற்சியின் போது மக்களோடு உரையாடிய முதல்வர்…! வீடியோ உள்ளே…!

Published by
லீனா

இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட  போது மக்களுடன் உரையாடினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தான் முதல்வர் என்பதையும் மறந்து வெளியே எங்கு சென்றாலும் மக்களை பார்த்தால் மிகவும் சாதாரணமான ஒரு மனிதனாக மக்களோடு மக்களாய் பேசுவது வழக்கம். அதே சமயம் முதல்வர் அவர்கள் தனது உடல் நலத்தை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் இவர் வாரத்தில் இரண்டு நாட்கள் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது, அவ்வப்போது ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்வது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட  போது, அவருடன் அமைச்சர் சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி செய்ய வந்திருந்தார்.

அப்போது அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடன் முதல்வர் மிகவும் இயல்பாக உரையாடினார். அச்சமயம் முதல்வருடன் பேசிய ஒரு பெண்மணி சார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை நான் ஏர்போட்டில் சந்தித்தேன். நீங்கள் கண்டிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினேன். இப்பொழுது நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.

உங்களது ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்கிறீர்கள். இதை நீங்கள் இப்படியே தொடர வேண்டும் என்று பேசினார். மேலும் கால்பந்து விளையாட ஸ்பெயின் சென்று தங்களது பெயரில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

முதல்வரிடம் விடாமல் பேசிய அந்தப் பெண்மணி கடைசியாக ஒன்று சார் என்று கூறி, எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார். முதல்வர் ஸ்டாப்களின் அவர்கள் மக்களுடன் மிகவும் சகஜமாக உரையாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago