Immanuvel Sekaranar Memorial, Paramakudi
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழக முழுவதிலும் இருந்து பலர் மரியாதை செலுத்துவதற்கு வரவுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநகர், புறநகர் பகுதிகளிலும், பரமக்குடி பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வர உள்ளார். அதேபோல் அதிமுக சார்பிலும், மற்ற அரசியல் கட்சியினர் சார்பிலும் அரசியல் தலைவர்கள் பரமக்குடிக்கு வர உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மரியாதை செலுத்துவதற்காக வருபவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே வந்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…