Immanuvel Sekaranar Memorial, Paramakudi
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழக முழுவதிலும் இருந்து பலர் மரியாதை செலுத்துவதற்கு வரவுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநகர், புறநகர் பகுதிகளிலும், பரமக்குடி பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வர உள்ளார். அதேபோல் அதிமுக சார்பிலும், மற்ற அரசியல் கட்சியினர் சார்பிலும் அரசியல் தலைவர்கள் பரமக்குடிக்கு வர உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மரியாதை செலுத்துவதற்காக வருபவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே வந்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…