முக்கிய பிரமுகர் கொலை: 12 ஆண்டுக்கு பின் 5 பேருக்கு இரட்டை ஆயுள் ..!

Published by
murugan

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் ஒரு பெண் சிவக்குமார் என்பவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதற்கான தவணையை கட்ட சென்ற அவரது மகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

அந்தப் பதிவை நீக்கும்படி அந்த பெண்ணின் தாயார் கெஞ்சிய நிலையில் அந்த இளம்பெண்ணின் தாயாருக்கு உதவியாக போலீசில் புகார் அளித்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வேலுசாமி இரவு வீடு திரும்பிய போது கந்துவட்டி கும்பல்  அவரை வழி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவகுமார், பூபதி, ராஜேந்திரன், கணேசன், அருன், அன்பு, ஆமையன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதில், ஆமையன் அக்கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில், பூபதி தலைமறைவானார். பின்னர்,இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கும் ,வேலுச்சாமி கொலை வழக்கும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது .

 நாமக்கல் விரைவு நீதிமன்றம் பலாத்காரம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் முக்கிய குற்றவாளியான ஆமையன் கொலை செய்யப்பட்டதால் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 லட்சம் அபராதம் விதித்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாமக்கல் நீதிமன்றம் சிவகுமார், ராஜேந்திரன், அருண், கணேசன் மற்றும் அன்பு  ஆகியோருக்கு இரட்டை ஆயுள் வழங்கியது.

Published by
murugan

Recent Posts

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

34 minutes ago

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு…

1 hour ago

கள்ளக்குறிச்சி விபத்து : டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார்..4 பேர் பலி!

கள்ளக்குறிச்சி : மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…

2 hours ago

இன்று நடைபெறவிருந்த த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 20, 2025) நடைபெறவிருந்த மாவட்ட செயலாளர்கள்…

2 hours ago

நீலகிரி , கோவையில் கனமழை இருக்கு… அலர்ட் விட்ட வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல. மேற்கு திசை காற்றின் வேக…

3 hours ago

காசா : உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்‌ரேல் படை தாக்குதல்! 32 பேர் பலி?

கான்யூனிஸ் : காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

4 hours ago