முக்கிய பிரமுகர் கொலை: 12 ஆண்டுக்கு பின் 5 பேருக்கு இரட்டை ஆயுள் ..!

Published by
murugan

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் ஒரு பெண் சிவக்குமார் என்பவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதற்கான தவணையை கட்ட சென்ற அவரது மகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

அந்தப் பதிவை நீக்கும்படி அந்த பெண்ணின் தாயார் கெஞ்சிய நிலையில் அந்த இளம்பெண்ணின் தாயாருக்கு உதவியாக போலீசில் புகார் அளித்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வேலுசாமி இரவு வீடு திரும்பிய போது கந்துவட்டி கும்பல்  அவரை வழி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவகுமார், பூபதி, ராஜேந்திரன், கணேசன், அருன், அன்பு, ஆமையன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதில், ஆமையன் அக்கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில், பூபதி தலைமறைவானார். பின்னர்,இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கும் ,வேலுச்சாமி கொலை வழக்கும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது .

 நாமக்கல் விரைவு நீதிமன்றம் பலாத்காரம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் முக்கிய குற்றவாளியான ஆமையன் கொலை செய்யப்பட்டதால் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 லட்சம் அபராதம் விதித்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாமக்கல் நீதிமன்றம் சிவகுமார், ராஜேந்திரன், அருண், கணேசன் மற்றும் அன்பு  ஆகியோருக்கு இரட்டை ஆயுள் வழங்கியது.

Published by
murugan

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

4 hours ago