கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,00,000 வழங்கிய மதிமுக – வைகோ அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கமாறு அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், கொரோனாவால் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு மேற்கொள்கின்ற மக்கள் நல்வாழ்வு மருத்துவப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு தாங்கள் விடுத்து இருக்கின்ற அழைப்பை ஏற்று, மதிமுக சார்பில், ரூ.10,00,000 நிதி வழங்குகின்றோம் என்றும் அதற்கான காசு ஓலையை, இத்துடன் இணைத்து இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

18 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

57 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago