கோவை மாவட்டம் முழுவதும் இன்று முதல் இறைச்சி கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது .ஆனால் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடைகளில் இறைச்சி வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில்,கோவை மாவட்டம் முழுவதும் இன்று முதல் இறைச்சி கடைகள் இயங்காது. மறுஉத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…