தமிழகத்தில் 10,000 கோடி முதலீடு… புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து…

Published by
Kaliraj
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க தொழில்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று(திங்கள் கிழமை) நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு  வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ.6,300 கோடி முதலீட்டில், 2,420 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜேஎஸ்டபுள்யூ நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்;
  • ஸ்பெயின் நாட்டின் மந்த்ரா டேட்டா செண்டர்ஸ் நிறுவனம், சென்னைக்கு அருகில் ரூ.750 கோடி முதலீட்டில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டம்; ஆசெங் ஹைடெக் நிறுவனம் ரூ.200 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கார்பன் பைபர் தகடுகள் உற்பத்தி திட்டம்
  • சிங்கப்பூர் வேன்ஸ் கெமிஸ்ட்ரி நிறுவனம் ரூ.50 கோடி முதலீட்டில் 750 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங் களை சுத்திகரித்தல் திட்டம்;
  • காஞ்சீபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் அபோல்லோ டயர்ஸ் நிறுவனம் ரூ.505 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • ஒரகடத்தில் ஹிரநந்தனி குழுமத்தைச் சேர்ந்த கிரீன்பேஸ் இண்டஸ்டிரியல் பார்க் நிறுவனம் ரூ.750 கோடிமுதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்காவின் டிபிஐ காம்போசிட்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘விண்ட் பிளேட்’ உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • எல்ஐ எனர்ஜி நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் 325 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் உற்பத்தி திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் ரூ.109 கோடி முதலீட்டில் 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்;
  • நெல்லை மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் பிரிட்டானியா நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிஸ்கட் தயாரிக்கும் விரிவாக்கத்திட்டம்;
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஐனாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி முதலீட்டில் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி திட்டம்;
  • சென்னை அம்பத்தூரில் கிரின் டெக் மோட்டார்ஸ் அண்டு சர்வீசஸ் நிறுவனம் ரூ.90 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பேட்டரி மற்றும் பி.எம்.எஸ் உற்பத்தி செய்யும் திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தென் கொரியாவின் எல்.எஸ். ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.250 கோடியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகனங்களுக்கான ‘சுவிட்ச்’ உற்பத்தி திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் கவ்ண்டர் மெசர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.51 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் உற்பத்தி திட்டம், என மொத்தம் 14 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில், சில நிறுவனங்களுடன் காணொலிக்காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Published by
Kaliraj

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago