தமிழகத்தில் 10,000 கோடி முதலீடு… புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து…

Published by
Kaliraj
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க தொழில்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று(திங்கள் கிழமை) நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு  வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ.6,300 கோடி முதலீட்டில், 2,420 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜேஎஸ்டபுள்யூ நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்;
  • ஸ்பெயின் நாட்டின் மந்த்ரா டேட்டா செண்டர்ஸ் நிறுவனம், சென்னைக்கு அருகில் ரூ.750 கோடி முதலீட்டில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டம்; ஆசெங் ஹைடெக் நிறுவனம் ரூ.200 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கார்பன் பைபர் தகடுகள் உற்பத்தி திட்டம்
  • சிங்கப்பூர் வேன்ஸ் கெமிஸ்ட்ரி நிறுவனம் ரூ.50 கோடி முதலீட்டில் 750 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங் களை சுத்திகரித்தல் திட்டம்;
  • காஞ்சீபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் அபோல்லோ டயர்ஸ் நிறுவனம் ரூ.505 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • ஒரகடத்தில் ஹிரநந்தனி குழுமத்தைச் சேர்ந்த கிரீன்பேஸ் இண்டஸ்டிரியல் பார்க் நிறுவனம் ரூ.750 கோடிமுதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்காவின் டிபிஐ காம்போசிட்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘விண்ட் பிளேட்’ உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • எல்ஐ எனர்ஜி நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் 325 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் உற்பத்தி திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் ரூ.109 கோடி முதலீட்டில் 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்;
  • நெல்லை மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் பிரிட்டானியா நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிஸ்கட் தயாரிக்கும் விரிவாக்கத்திட்டம்;
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஐனாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி முதலீட்டில் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி திட்டம்;
  • சென்னை அம்பத்தூரில் கிரின் டெக் மோட்டார்ஸ் அண்டு சர்வீசஸ் நிறுவனம் ரூ.90 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பேட்டரி மற்றும் பி.எம்.எஸ் உற்பத்தி செய்யும் திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தென் கொரியாவின் எல்.எஸ். ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.250 கோடியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகனங்களுக்கான ‘சுவிட்ச்’ உற்பத்தி திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் கவ்ண்டர் மெசர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.51 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் உற்பத்தி திட்டம், என மொத்தம் 14 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில், சில நிறுவனங்களுடன் காணொலிக்காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Published by
Kaliraj

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

2 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

2 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

3 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

4 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

4 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

5 hours ago