Michaung Cyclon - Heavy rain [file image]
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 130 கிமீ தூரத்தில் உள்ள புயலாந்து 14கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதால் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையே நாளை காலை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் நேற்றும் இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றிரவு தொடங்கிய கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேகமெடுக்கும் புயல்..! சென்னையை புரட்டி போட்ட கனமழை.! பொதுமக்கள் கவனத்திற்கு….
சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் , மயிலாடுதுறை, தஞ்சாவூர் , அரியலூர், பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…