மேட்டூர் அணையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும் டெல்டா விவசாயிகள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, 8 ஆண்டுகளாகக் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட் ,செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாகஉள்ளது. குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைதொடர்ந்து, இன்று மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் மேட்டூர் அணை நீர் திறப்பது தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…