வாழ்க்கையிலும் கதநாயகன்..வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர் என்னும் சகாப்தம்… பிறந்த தினம் இன்று..!உடன்பிறப்புகள் கொண்டாட்டம்

Published by
kavitha
  • திரையுலகில் மட்டும் நான் கதநாயகன் இல்லை அரசியலிலும் கதாநாயகன் என்று நிருபித்த மாபெரும் சகாப்தம் பிறந்த தினம் இன்று.
  • சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்

இன்று எம்.ஜி.ஆர் என்று மூன்று எழுத்து சொந்தக்காரருக்கு 103 வது பிற்ந்த நாள்.ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் ஆச்சரியபட வேண்டிய விஷயம் காரணம் இதை  வடமாநில நடிகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஒரு முறை வடமாநில திரையுல ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்களை இந்தியில் ரீமேக் செய்கிறோம் அதில் அவரைப் போல நீங்கள்  நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு எங்களால் எம்ஜிஆர்  போல நடிக்க முடியாது என தெரிவித்தனர்.

Image result for mgr images

எம்.ஜி.ஆர் என்றால் நல்ல சுறுசுறுப்புத்தனம், அந்த சிவந்த உதட்டின் ஒரத்தில் எப்பொழுதும் உற்சாக பொருந்திய சிரிப்பு, எந்த நடனத்திற்கும் ஈடுகொடுக்கும் நடனம், சண்டைப் பயிற்சி, மாறாக்கொள்கை,ஏழைகள் மீது கருணை மற்றும் தொழிலாளர்கள் மீது அன்பு கலந்த மரியாதை,தாய் மீது பக்தி, தேசத்தின் மீதும் மக்கள் மீதுமான சேவை ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திரங்கள் மக்களை வசீகரித்தது. திரையுலகில் எப்படி வேண்டுமானால் நடித்துக் கொள்ளலாம் ஆனால் நிஜவாழ்வில் அவ்வாறு இருப்பது சற்று கடினம் ஆனால் இதில் எம்.ஜி,ஆர் விதிவிலக்கு பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்தார் எம்ஜிஆர் என்றால் என்ன சொல்வது திரையில் மட்டும் கதநாயகன் இல்லை நிஜத்திலும் கதாநாயகன் தான் இன்றும் அவருடைய திரைப்படங்கள் மக்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக அந்தக்காலம் முதல் தற்போது வரை வலம்வருபவர்.

எம்.ஜி.ஆர் அரசியலிலும் ஆர்வமும் கொண்டவர் தன்னுடைய படங்களில் அரசுகளை விமர்சிப்பதும்,போற்றிப்படுவதும் உண்டு. பேரறிஞர் அண்ணா மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவர் அதன் காரணமாகவே திமுகவில் இணைந்தார் அதன் பின் ஒருகட்டத்தில் திமுகவில் இருந்து விலகி தானே சொந்தமாக அதிமுக என்ற கட்சியை  தொடங்கி அதில் வெற்றி மீது வெற்றிகளை குவித்து தமிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் ஆட்சிகட்டை அலங்கரித்தார்.உடன்பிறப்புகளே என்று தனது தொண்டர்களை உறவினர்களாகவே பாவித்த உறவுக்கு சொந்தக்காரர்.

இவருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்பான  திட்டங்கள் எத்தனையோ இருந்தாலும் இன்றளவும் கொண்டாடப்படுகிற ஒரு திட்டம் சத்துணவு திட்டம்.ஏழைகளின் பசியை நன்கு அறிந்த எம்ஜிஆர் பள்ளிகளில் ஏழைப்பிள்ளைகளின் வயிற்றை நிரப்பிய பெருமைக்கு சொந்தக்கரர் இந்த சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்திற்கு பலலட்சக்காண பேர்கள் தங்களது  வாழ்த்துகளை தெரிவித்தனர்.இன்றும் அவருக்கு தீவிரமான ரசிகர் கூட்டம் உள்ளது எம்.ஜி.ஆர் என்றாலே இன்றும் தனி மரியாதை அன்பு காரணம் ஒரு மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே இதை அறிந்தால் அவனுக்கு தோல்வி இல்லை என்று அதற்கு தகுந்தாற் போல் வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர். .  அவர் காலத்தையே வென்றவர் மட்டுமில்லை மக்களின் மனதையும் வென்ற கதாநாயகன்..

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

7 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

7 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

8 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

9 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

10 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

10 hours ago