அமைச்சர் கைது : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கண்டனம்.!

Published by
Muthu Kumar

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம் எனக் குறிப்பிட்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, தமிழக அமைச்சரைக் கைது செய்து பாஜக அரசு மிரட்டப் பார்க்கிறது என தெரிவித்தார். ஏற்கனேவே அமலாக்கத்துறையின் சோதனை குறித்து, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தலைமைச்செயலகத்துக்குள் சோதனை நடைபெற்றது குறித்து தனது கண்டன அறிக்கையை தெரிவித்திருந்தார். பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செயல்படுகிறது, இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.</


p>

Published by
Muthu Kumar

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

9 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

9 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

10 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

11 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

11 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

12 hours ago