PM Modi and Devegowda - TN Minister Duraimurugan [File Image]
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வேலூர், காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்களை கூறியிருந்தார்.
அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.!
அவரிடம், முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகா) தலைவர் தேவகவுடா பற்றி கேட்கப்பட்டபோது, தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, அதற்கு முன்னதும் சரி, தற்போதும் சரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தரக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என வைராக்கியத்துடன் இருப்பவர் தேவகவுடா. தமிழகத்திற்கு சாதகமான வார்த்தைகளை பேசவே மாட்டார். அவர் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது தேவகவுடா, மோடி பக்கம் நிற்கிறார். அப்போதுதான் அவரது மகனின் ( கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி) அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்று கருதுகிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவருக்கு இதுதான் வேலை என்று கிண்டலாக பதில் கூறினார் அமைச்சர் துரைமுருகன்.
அடுத்ததாக, அண்ணாமலை மூன்றாவதாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறுவது பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், அவர் வெளியிடட்டும். அதை யார் தடுத்தார்கள்.? தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதனை திமுக தனது கூட்டணி கட்சிகளோடு சந்திக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…