Minister Durai murugan [Image source : Vikatan]
மேகதாது என்கிற வார்த்தை கூட உச்சநீதிமன்ற உத்தரவிலோ, காவேரி தீர்ப்பாயத்தின் உத்தரவிலோ இல்லை என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என கோரிக்கையை வைப்பதற்காக இன்று டெல்லி புறப்படுகிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அவர் இன்று செய்தியாளர்களிடம் இது பற்றி பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
இது குறித்த அவர் கூறுகையில், வழக்கமாக தேவைப்படும் தண்ணீர் அளவைவிட தற்போது அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதால், காவேரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை விடுப்பதற்காக காவிரி தீர்ப்பாய அனைய அதிகாரிகளை சந்திக்க டெல்லி செல்ல உள்ளேன். என குறிப்பிட்டார். அப்படியே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரா சிங்கையும் சந்திக்க உள்ளேன் என குறிப்பிட்டார்.
அடுத்ததாக செய்தியாளர்கள் மேகதாது அணை பற்றி கேட்கையில், மேகதாது அணை என்கிற வார்த்தை கூட உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் உத்தரவிலோ குறிப்பிடப்படவில்லை. அதனால் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும் மேகதாது அணை கட்டப்படுவதாக கூறப்படுவது தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதி எனவும் மேகதாது அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெளிவுபடுத்தினார்.
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…