‘மாற்றுத்திறனாளிகள் போராட்ட வாபஸ்’- உதவித்தொகையை உயர்த்தி தருவதாக அமைச்சர் கீதாஜீவன் உறுதி..!

அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் வந்து சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து தொடங்கினர்.
போலீசார் தடுத்து நிறுத்தம்
காவல்துறையினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், அனுமதியை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயல்பவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
போராட்டம் வாபஸ்
இந்த நிலையில், அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025