2011-க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், காணொலி மூலம் கலந்துரையாடினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளார். இது 2011-ஆம் ஆண்டுக்கு முன் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும், 2017 ரெகுலேஷன் மாணவர்களுக்கு முதுகலை, இளங்கலை படிப்புக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும் . 2013 ரெகுலேஷன்படி படித்த யு.ஜி மாணவர்களுக்கு ஜூன் 14-ல் தேர்வுகள் தொடங்கும் என்றும், கடந்த முறை தேர்வு எழுதாமலும் , கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-க்குள் கட்டணம் செலுத்தலாம் என தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் 15.06.2021 தொடங்கி 15.07.2021-க்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 30.07.2021-க்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…