அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் விடுமுறை என்பதால், வழக்கு வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம்.

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்தாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டது. அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் என 7 பேர் மீது 2006ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ரூ.6.50 கோடி மதிப்பிலான 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், விசாரணை நீதிபதி விடுப்பு என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

3 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

3 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

4 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

5 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

6 hours ago