முதற்கட்ட நிவாரண பணிகள்.. அரசியல் செய்ய வேண்டாம்.! அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!

Published by
மணிகண்டன்

தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த வீடுகளுக்கு நிதியுதவி , கால்நடை உயிரிழப்புகளுக்கு நிவாரணம் என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.

வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

அதற்கான கணக்கெடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக நிவாரண பணிகள் தொடங்கப்பட்டுள்ளன . அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் உள்ளனர்.  அப்போது கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு நிவாரண உதவிகள், கால்நடை நிவரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தற்போது நெல்லை மாவட்டத்தில் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முதற்கட்டமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுக்கப்படும். நிவாரண பணிகள் விவகாரத்தில் பிற கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இது நூறு வருடத்தில் இதுவரை பெய்யாத கனமழை அளவாகும். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவது குறித்து செய்தியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் தமிழகம் வரட்டும். வந்து பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிடட்டும் பின்னர் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக தொலைபேசியில் பேசினார். அப்போது தமிழக முதல்வர் பிரதமரிடம் தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள விரைவாக பேரிடர் நிவாரண நிதி உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

Recent Posts

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

1 hour ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

2 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

4 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

5 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

6 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

6 hours ago