ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின்!

Published by
Surya

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், தான் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பதாகவும், கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே நான் வேட்பாளர் என கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் குருவிகளை போல சுட்டுக்கொல்லப்பட்டதை இன்று நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது, இரத்தக் கண்ணீர் வருகிறது என கூறிய ஸ்டாலின் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். பலியானோர் குடும்பத்தினருக்கு தகுதியில்லாத வேலையை கொடுத்தனர் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் பல இடங்களில் அடிக்கல் நாட்டுகின்றனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், தேர்தல் முடிவு வெளியாகி நாங்கள் பதவியேற்றதும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago