உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் – திறந்து வைத்தார் முதல்வர்!

Published by
Rebekal

உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் செயல்படும் என கூறி, சேலத்தில் நேற்று முதல்வர் மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் மினி கிளினிக்குகள் திட்டம் கொண்டுவரப்படும் என அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 1,400 கிராமப்புறங்களிலும்,   200 பெருநகர சென்னை மாநகராட்சிகளிலும், 200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் கிளினிக்குகள் என மொத்தம் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டு இதற்கானவேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் 630 அம்மா மணி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம்,  வியாசர்பாடி எம்.பி.எம் தெரு, மயிலாப்பூர் கச்சேரிசாலை, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கிராமம் ஆகிய இடங்களில் முதல்வர் நேரில் சென்று ரிப்பன் வெட்டி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் திறந்து வைத்துள்ளார். மொத்தம் 100 அம்மா மினி கிளினிக்குகள் சேலத்தில் துவங்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 34 கிளினிக்குகள் மட்டும் தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் பேசிய முதல்வர் காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்களால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை பயன்படுத்தி தங்களை குணப்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஏழை எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாகவும், உழைக்கும் வர்க்கத்திற்கு விவசாயி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடக்க கலத்தில் கடுமையாக இருந்ததாகவும், அதனை கட்டுப்படுத்தி தற்போது இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்துள்ள மாநிலமாக தமிழ்நாட்டை படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்கின்ற அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

17 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

21 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

33 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

57 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago