கோவை மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி, இவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரேவதியை, அவருடன் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின்ஷா என்ற நபர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவர் ரேவதியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்நிலையில், இதற்க்கு ரேவதி சம்மதித்தார். மேலும் ரேவதியிடம் ரூ 7லட்சம் பணமும் கேட்டு வாங்கியுள்ளார்.
ஒருநாள், ரேவதியை தொடர்பு கொண்ட சின்னு ஜேக்கப் என்பவர் தாம் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், அவருடைய நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ரேவதி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், அவரை கோவைக்கு வரவழைத்த ரேவதி, தனது நண்பர்களின் உதவியுடன் ஜிதின்ஷாவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…