மேலவளவு கொலை வழக்கு ..! 13 பேர் மீதான இடைக்கால உத்தரவை விலக்கியது நீதிமன்றம்

Published by
Venu

மேலவளவு கொலை வழக்கில் 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.அதில் 2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக 3 பேரை முன்விடுதலை செய்தனர். பின்னர் ஒருவர் இறந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து மீதம் உள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசு உத்தரவிட்ட நிலையில், கடந்த 9-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.முன்விடுதலை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது முன் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய கூடாது. வழக்கு முடியும் வரை 13 பேரும் வேலூரில் தங்கியிருக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.வேலூரில் தங்கி இருப்பதை மதுரை, வேலூர் எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து முன் விடுதலை தொடர்பான அரசாணை தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளா்த்த வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்டவா்கள் தரப்பு கோரிக்கை வைத்தனர் .பின்னர் வழக்கு முடியும் வரை 13 பேரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்றும், வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.மேலும் வழக்கின் விசாரணையை மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Published by
Venu

Recent Posts

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

3 minutes ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

5 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

41 minutes ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

13 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

14 hours ago