மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது…!

Published by
பால முருகன்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் இரவு நேரங்களில் வந்து கொண்டு சென்றிருந்தனர். மேலும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலியல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் இந்த தகவலை தொடர்ந்து தக்கலை பகுதியில் உள்ள காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை செய்த பொழுது 3 சிறுமிகளுடன் இரண்டு ஆண்கள் இருந்தனர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர்.

காவல்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். இரண்டு பேரையும் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்றும் அவர் வீரவ நல்லுரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றோருவர் பெயர் சுனில் இவர் தக்கலை பகுதியில் உள்ளவர் என்றும் இவர் கூலித்தொழில் செய்துவருவ தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியததாக லதா என்ற பெண்ணையும் கைது செய்தனர். லதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது விசாரணையில் லதாவின் மூன்று பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுதியாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த மூன்று பெண்களையும் காவல்துறையினர் மீட்டு பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளநிலையில், தப்பி ஓடிய பாபு, செல்வகுமார், ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பெற்ற தாய் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago