மதுரை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பர்மா காலனி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்த கிறிஸ்தவ புல்டர்ஸ் அசெம்ப்ளி சபை நடத்தி வந்தவர் விஜயன் , மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்பு மதுரை சுப்பிரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஒரு மெக்கானிக் மூலம் விற்க திட்டமிட்டு அந்த மெக்கானிக்கிடம் கேட்டார், ஆனால் விஜயனால் மோட்டார் சைக்கிள் குறித்து போதிய விவரங்களை கூற முடியாமல் தவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அந்த மெக்கானிக் உடனடியாக அங்குள்ள சுப்பிரமணியபுரம் போலீஸாரிடம் தகவலை தெரிவித்தார், இந்த தகவல் கிடைத்ததும் விஜயனை போலீசார் பிடித்து விசாரித்தனர் விசாரணை மேற்கொண்டதில் இது குறித்து காவல்துறையினர் தெரிவித்தது , விஜயன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் மதுரைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார், மதுரைக்கு வந்ததும் 10,000 ரூபாய்க்கு வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்துள்ளார், மேலும் அங்கீகரிக்கப்பட்ட திருச்சபையைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் கொரனோ வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக வீட்டு வாடகை கொடுக்க போதிய வருமான மின்றி மோட்டார் சைக்கிளை திருடி பணத்தை கொடுக்க திட்ட மிட்டுள்ளார், மேலும் திருமங்கலம், எஸ்.எஸ்.காலனி, சுப்பிர மணியபுரம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு பிறபிக்கப்பிட்டிருந்த நிலையில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகமான மோட்டார் சைக்கிள்களை விஜயன் திருடியது தெரிய வந்துள்ளது.
மேலும் சில வாகனங்களை அடகு வைத்து பணம் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது மேலும் விஜயனுக்கு உதவிய செல்வம் என்ற நபரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…