முதுமலை: 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொற்றுப்பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை!

Published by
Hema
  • முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.
  • மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும்  கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியத்தைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி ஆய்வுகள் மேற்கொண்டதில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. யானையின் தும்பிக்கை, மலம் கழிக்கும் பகுதி ஆகியவற்றில் இருந்து நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

இதையடுத்து யானைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நான்கு நாட்களுக்குள் சோதனை முடிவு தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
Hema

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

16 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

53 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago