திருமணமான க.காதலனின் வீட்டில் காதலர் தினத்தன்று தனிமையில் இருந்த தனது மனைவியையும், க.காதலனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்தவர் பிரகாஷ்.இவருக்கு பிரியா என் கிற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உடன் இருவரும் வாழ்ந்து வருகிறார்.இவ்வாறான இல்லற வாழ்க்கையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சின்னதுரைக்கும் பிரகாஷின் மனைவி பிரியாவிற்கும் ஒரு ஆண்டு காலமாகவே மிகவும் நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த விவகாரத்தால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் பிரியா கோபித்துக் கொண்டு அவருடைய தாயாரின் வீட்டிற்குச் சென்று உள்ளார்.
இந்நிலையில் 3 குழந்தைகளோடு கடந்த மூன்றாம் தேதி கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பிரகாஷ் இதனை அடுத்து இருவரையும் அழைத்துப் பேசிய காவல் துறையினர் கணவன் மனைவியை சமரசம் செய்து சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.இவ்வாறு ஒருவழியாக சமாதானம் ஆன நிலையில் காதலர் தினமான கடந்த (வெள்ளிக்கிழமை) பிரியா நீண்ட நேரமாக வீட்டில் இல்லை. இதனை கவனித்த அவருடைய கணவர் ஒரு வேளை அவருடைய தாயாரின் வீட்டிற்குச் சென்றுயிருப்பார் என்று அங்கு தேடிப் பார்த்த போது அங்கும் அவர் இல்லாததால் பெருத்த சந்தேகம் அடைந்த பிரகாஷ், தன் மனைவியோடு நெருங்கி பழகி வந்த சின்னத்துரையின் வீட்டிற்கே நேரே சென்றுள்ளார்.
வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது இருவரும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் பிரகாஷ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டின் முன்புறக் கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பினார்.என்றாலும் இதன் பிறகு அவருக்கு கோபம் அதிகரிக்கவே அரிவாளுடன் சின்னத்துரையின் வீட்டிற்குச் வேகமாக சென்ற பிரகாஷ் பூட்டிய கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, படுக்கை அறையில் இருந்த இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இருவரும் அலறவே இந்த சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார் கணவர் பிரகாஷை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…