காதலனிடம் கள்ளக்காதலன் பற்றி பெருமை பேசிய பெண் கொலை!

Default Image

காதலனிடம் கள்ளக்காதலன் பற்றி பெருமை பேசிய பெண்ணை கொலை செய்தவர் கைது. 

புதுச்சரி மாநிலத்தில் உள்ளதவழக்குப்பம் என்னும் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியாகிய 48 வயதுடைய பூபாலனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சாந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சாராயபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து அதை விற்பனை செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கருது வேறுபாட்டால் சாந்தியை பிரிந்து பூபாலன் வேறு மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அவர் இங்கு இல்லாததால் சாந்திக்கு ஆறுமுகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் புதுச்சேரிக்கு சாந்தியை பார்க்க வந்த பூபாலன் அவரை அழைத்ததும் உடனடியாக அவருடன் சாந்தி பிரச்சனை பண்ணாமல் சென்றுள்ளார். இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததால், குடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கையில் ஆறுமுகம் குறித்து சாந்தி எதோ பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் சாந்தியை கொலை செய்துவிட்டு ஓடியுள்ளார். கடற்கரை ஓரமாக கிடந்த சடலம் சாந்தி தான் என்பதை அறிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel
Sharon Raj Case
TVK Leader Vijay
Jabbar Ali Social Activist