காதலனிடம் கள்ளக்காதலன் பற்றி பெருமை பேசிய பெண்ணை கொலை செய்தவர் கைது.
புதுச்சரி மாநிலத்தில் உள்ளதவழக்குப்பம் என்னும் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியாகிய 48 வயதுடைய பூபாலனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சாந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சாராயபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து அதை விற்பனை செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கருது வேறுபாட்டால் சாந்தியை பிரிந்து பூபாலன் வேறு மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அவர் இங்கு இல்லாததால் சாந்திக்கு ஆறுமுகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் புதுச்சேரிக்கு சாந்தியை பார்க்க வந்த பூபாலன் அவரை அழைத்ததும் உடனடியாக அவருடன் சாந்தி பிரச்சனை பண்ணாமல் சென்றுள்ளார். இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததால், குடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கையில் ஆறுமுகம் குறித்து சாந்தி எதோ பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் சாந்தியை கொலை செய்துவிட்டு ஓடியுள்ளார். கடற்கரை ஓரமாக கிடந்த சடலம் சாந்தி தான் என்பதை அறிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…